Thursday, March 3, 2011

இந்திய பட்ஜெட் 2011-12

இந்திய பட்ஜெட்டில் விவசாயத்துறை:
இந்த ஆண்டின் இந்திய பட்ஜெட்டில் விவசாயத்துறையில் பல ஆழ்ந்த சிந்திப்பு உள்ளது என்பது தெரிய வருகிறது. இந்திய பட்ஜெட்டில் (2011 - 12) விவசாயத்துறை மூன்று முக்கிய கருத்துக்கள் வரவேற்க்க பட வேண்டும். 1 . மத்திய அரசாங்கம் 'நீடித்த-நிலைத்த விவசாயத்தை' கொண்டுவரும் திட்டத்தின் படி (National Mission for Sustainable agriculture) அங்கக விவசாயத்தையும் (Organic Farming), நவீன தொழில்நுட்பத்தோடு பாரம்பரிய விவசாய முறையை ஊக்குவிக்க உள்ளது பாராட்டக்குரியது. இது அரசின் சிந்தனையில் ஏற்பட்ட மாபெரும் 'Paradigm shift' என்றே நினைக்க தோன்றுகிறது. ஆரம்பம் தொட்டே இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை விவசாயிகள் இடையே கொண்டு செல்ல அயராது உழைத்து வரும் தொண்டு நிறுவனங்களுக்கும், முன்னோடி விவசாயிகளுக்கும், பத்திரிகைகளுக்கும், வெற்றி என்றே  நினைக்கிறேன்.
2 . சிறு-குறு தானியங்களான கம்பு, கேழ்வரகு, சோளம்  உற்பத்தி பெருக்கத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு. இது நாட்டின் உணவு தேவையை தீர்க்க மட்டுமல்லாது இந்த தனியங்களுகே உரிய தனிப்பட்ட சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களுக்காக பெருக்க படவுள்ளது என்ற செய்தியே சிறப்புக்குரியது.
3. பயிறு வகை பயிர்கள் உற்பத்தி பெருக்கத்திற்கு 60,000 பயிறு கிராமங்கள் உருவாக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு (இது சென்ற பட்ஜெட்டிலும் குறிப்பிட பட்டது). மற்றும் தீவன பயிர் உற்பத்தி பெருக்கத்திற்கு 25,000  கிராமங்களில் ரூ. 300 கோடி செலவில் திட்டம்.
இதில் ஒரு சிக்கல். சிக்கல் என்று சொல்வதை விட எச்சரிக்கை என்னவென்றால் 'பசுமை புரட்சி' கிழக்கு மாநிலங்களில் முழு வீச்சில் செய்ய பட ரூ.400  கோடி ஒதுக்கீடு. 'ப.பு.'-னால் ஏற்பட்ட பாதிப்புக்களை மனதில் கொண்டு செயல்பட்டால் சரி.
எவ்வளவு திட்டம் போட்டும் எதுவும் பயன் இல்லையே என்ற வருத்தம் நம்மில் பலரிடையே இருப்பினும் அரசின் சிந்தனையில் தெளிவு பாராட்டப்பட வேண்டும். 

Also see this
இந்திய பட்ஜெட்டில் சுற்றுச்சூழல்நடந்து முடிந்த இந்திய பட்ஜெட் 2011 -12  தாக்கலில், 1 . 2008 - ஆம் ஆண்டு பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்ள தேசிய செயல் திட்டம் (National Action Plan on Climate Change) போடப்பட்டது. அதில் எட்டு mission-கள் உள்ளன. அதில் ஒன்று 'பச்சை இந்தியா' திட்டத்தின்படி வனத்தின் பரப்பளவை அதிகபடுத்துதல். இந்திய பட்ஜெட் 2011 -12 - இல் ரூ. 200 கோடி இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
2 . மேலும், சுற்றுச்சூழல் சீரமைக்க ரூ.200 கோடியும், நாட்டில் உள்ள முக்கிய ஆறுகள்-குளங்கள் சீர்திருத்த ரூ.200 கோடியும் ஒதுக்கீடு செய்ய பட்டுள்ளது வரவேற்க்கதக்கது.

மேலும்,
1 . சூரிய சக்தியால் இயங்கும் ஒளி கருவிக்கு (solar lantern) மீதான சுங்கத்தீர்வை (customs duty)  10 - ல் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.
2 . மேலும், LED மீதான சுங்கவரி 5 % -ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும், சூரிய சக்தி (Solar Energy) பயன்பாட்டை அதிகரிக்கும் என்று நம்பலாம்.
இது தவிர, இயற்கை ஆர்வலர்களுக்கு மற்றும் ஒரு நற்செய்தி.
3 . மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனத்தை ஊக்குவிக்க 'National Mission on Hybrid and Electrical Vehicle' விரைவில் அரசு அறிவிக்கவுள்ளது. இதன் முன்னோட்டமாக 
மின்சார வாகனத்தில் பயன்படுத்தபடும் பாட்டரி மீதான சுங்கவரி குறைப்பு (அ) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
4 இதில் ஹைப்ரிட் வாகனங்களுக்கான மாற்று கிட் (conversion kit) 
மீதான சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் Fuel Cell Technology பயன்படுத்தும் வாகனங்கள் மீதான சுங்கவரியும்  குறைக்கப்பட்டுள்ளது. 
Also see this
இயற்கையில் தான் தீர்வு உள்ளது என்பதை அரசு உணர்ந்துள்ளது. அரசின் சிந்தனையில் இந்த முதிர்ச்சி பாராட்டக்குரியது.
நன்றி. 

No comments:

Post a Comment